Skip to main content

எழுப்புதலை பெற நாம் செய்ய வேண்டியவை


👉இரட்சிக்கப்பட்டு மறுபடியும் பிறந்த அனுபவம் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும்

1) பாவ வாழ்க்கை
2) பின்மாற்றம்
3)ஆவிக்குரிய குளிர்ந்த நிலைமை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

👉 உலகத்தில் உள்ள அனைத்து காரியங்களை காட்டிலும் ஒவ்வொரு நாளும் தேவனை அதிகம் நேசிக்க வேண்டும்.

அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.

எழுப்புதல் அடைந்த கிறிஸ்தவன் மட்டுமே கணவன், மனைவி, பிள்ளைகள் பெற்றோர்கள் இன்னும் மற்ற உலக காரியங்களைவிட, தன் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு பெலத்தோடும் தேவனை நேசிக்க முடியும்.

👉அனுதினமும் வேதம் வாசிக்க வேண்டும், எழுப்புதல் அடைந்த இருதயம் வேதவசனத்தில் களிகூரும், ஆனால் குளிர்ந்த இருதயமோ இயந்திரத்தைப் போலிருக்கும்.

👉 அனுதினமும் ஜெபிக்க வேண்டும், எழுப்புதல் அடைந்தவரின் ஜெபம், பிறரை உலுக்குவதாக இருக்கும், அந்த ஜெபங்கள் தேவனின் சிங்காசனத்தை தொடுவதாக இருக்கும்.

👉 விழிப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும், கவனமாக, விழிப்பாக, சுறுசுறுப்பாக, பாதுகாப்பாக வாழ கற்று கொள்ள வேண்டும். குளிர்ந்த நிலைமையிலுள்ள கிறிஸ்தவர்களை, பிசாசு எளிதில் தோற்கடித்துவிடுவான். அவர்கள் எளிதில் பிசாசின் தாக்குதலுக்கு உள்ளாவர்கள்.

👉  ஒழுக்கமான வாழ்க்கை

ஆவிக்குரிய வாழ்வி;ல் மட்டும் அல்ல வாழ்வின் எல்லா பகுதிகளிலும் ஒழுங்கு காணப்பட வேண்டும். மேலும், சாட்சியில்லாத வாழ்க்கை, ஜெபமில்லாத வாழ்க்கை பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்துதல், பரிசுத்த ஆவியை அணைத்துப் போடுதல், சிற்றின்பப் பிரியராக உலகப் பிரகாரமாக வாழ்வது போன்றவைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும்.

👉 ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டும், நரகத்திற்க்கு செல்லும் மக்களை குறித்து பாரம் நமக்கு வேண்டும். எழுப்புதல் அடைந்த கிறிஸ்துவ விசுவாசி, அதிக ஆத்ம பாரம் உடையவனாய் இருப்பான். பின்மாற்றமடைந்த கிறிஸ்தவன், பாவத்தில் மக்கள் நரகத்திற்குப் போனாலும் அதைக் குறித்து கவலைப்படவே மாட்டான்.


👉இதை வாசிக்கும் அன்பு சகோதரனே! சகோதரியே!

உங்கள் தனிப்பட்ட வாழ்வில் எழுப்புதல் காணப்படுகிறதா? கர்த்தரை விட்டு அதிக தூரம் சென்றிருப்பிர்களானால் இன்றெ ஆண்டவரண்டை வந்துவிடுங்கள். கர்த்தர் உங்களை கொண்டு பெரிய காரியங்களை செய்ய விரும்புகிறார். உங்களுக்குள் எழுப்புதல் ஏற்பட்டால் தான் உங்கள் குடும்பம் எழுப்புதல் அடையும். எழுப்புதல் பெற்றிட இன்றே அவர் கரத்தில் உங்களை அர்ப்பணம் செய்யுங்கள். அடுத்த அத்தியாயத்தில் குடும்ப எழுப்புதலை குறித்து காணலாம்

Comments

Popular posts from this blog

  🔍அசூசா தெரு எழுப்புதல் -  Azusa Street Revival 1906-ம் ஆண்டு, அசூசா தெரு எழுப்புதல் ஏற்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, உலக முழுவதிலும் இருந்து மக்கள் திரண்டு வந்து, ஜெபிக்கவும், கர்த்தரைத் தேடவும், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறவும், அந்நிய பாஷைகளில் ஜெபிக்கவும் தொடங்கினர். அநேக அற்புதங்கள் நடந்தன. விசுவாசிகள் இந்த எழுப்புதல் அக்கினியை தங்கள், தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர், ஆங்கேங்கே பெந்தேகோஸ்தே எழுப்புதல் வேகமாகப் பரவியது. ஆதை தொடர்ந்து சுகமளிக்கும் எழுப்புதல், மற்றும் அநேக தீர்க்கதரிசன ஊழியங்கள், விசுவாச ஊழியங்கள் மூலம் பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் வளர்ச்சி அடைந்தன.  🔍சுகமளிக்கும் எழுப்புதல் 1920-ம் ஆண்டு, அலெக்சாண்டர் டூவி அவர்கள் முலம் ஒரு பெரிய சுகமாளிக்கும் எழுப்புதல் ஏற்ப்பட்டது. இவர் சுகம் அளிக்கும் எழுப்புதலின் தந்தை என்று அழைக்கப்பட்டார். இவர் சீயோன் என்னும் சுகம் அளிக்கும் மையம் ஒன்றை நிறுவினார். இதிலிருந்து மிகவும் பிரசித்தி பெற்ற சுகமளிக்கும் ஊழியர்கள் தோன்றினர். அவர்களில் சிலர் போஸ் டவுன், ஜான ஜி லேக், ரேமான்ட் ரிச்சி, ஸ்மித் விக்ள்ஸ்
                                    எழுப்புதல் என்றால் என்ன?  என்பதையும், அதை குறித்த , விளக்கங்களையும் கடந்த  அத்தியாயத்தில் பார்த்தோம்.  இந்த  அத்தியாயத்தில் எழுப்புதல்  ஏற்படும்போது நடைபெறும்  விளைவுகள் என்ன? என்பதை சில சரித்திர  உதாரணங்களோடு நாம்  காணலாம். 🌍  வேல்ஸ் தேச எழுப்புதல் (1904 - 05)         ⭐  இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் தேசத்தில் எழுப்புதல் ஏற்பட்ட போது, எழுப்புதல் அடைந்தவர்கள் எங்கும் சென்று பிரசங்கம் செய்தார்கள்.         ⭐   சினிமா, நடன, விளையாட்டு அரங்குகள், மக்கள் செல்லாதால் மூடப்பட்டன.         ⭐ சமுதாயத்தில் குற்றங்கள் குறைந்ததால், காவலருக்கு (Police) வேலையில்லா நிலைமஏற்பட்டது. 🌍 கென்டக்கி எழுப்புதல், அமெரிக்கா (1800)  ⭐  அமெரிக்கா தேசத்தில் உள்ள கென்டக்கியில் எழுப்புதல் ஏற்பட்டபோது அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. எழுப்புதல் வீரர்களால் 600க்கும் மேற்பட்ட கல்லூரிகள்  நிறுவப்பட்டன. 🌍ஹெப்ரைடஸ் எழுப்புதல் - (Hebrides)   ⭐ இங்கிலாந்தில் உள்ள ஹெப்ரைடஸ் தீவுகளில் எழுப்புதல் ஏற்பட்ட போது ஜனங்கள், தேவ பிரசன்னத்தை சபைகளில் மட்டும் அ